ஆம் ஆத்மி கட்சி. ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரி எப்படி இருக்கும்.

  • தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறையும்,
  • அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயரும்,
  • கல்வி கட்டணம் செலுத்தும் சுமை குறையும்,
  • தனியார் மருத்துவ மனை களுக்கு செல்ல தேவையில்லை,
  • அரசு மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் இலவசமாக கிடைக்கும்,
  • மருத்துவ சோதனைகளும் இலவசமாக கிடைக்கும். மருத்துவ செலவு செய்ய தேவையில்லை,
  • நடமாடும் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும்,
  • சுகாதாரமான குடிநீர்.. போது மான அளவு தரப்படும்,
  • சுகாதார மான குடிநீர் உடல் நலத்தை காக்கும்,
  • 200 யூனிட் வரை இலவச மின்சாரம், உண்மையான ஏழைகளுக்கு கிடைக்கும்,
  • அரசு மக்கள் நல திட்டங்கள், மக்களுக்கு சேவை புரியும் சட்டத்தின் கீழ், வீடு தேடி வரும்,
  • ஊழல் இருக்காது,
  • அரசியல் தலையீடு இருக்காது,
  • மிக முக்கியமாக அல்லக்கைகளின் அளப்பறைகள் இருக்காது,
  • அரசு அலுவலகங்கள் ஒழுங்காக நேர்மையாக இயங்கும்,
  • அரசின் திட்டங்கள் அனைத்தும்,கெடு விதித்த தேதிக்கு முன்பே முடிக்கப்படும்,
  • ஒப்பந்த தாரர்களின், உயர் அதிகாரிகளின், கூட்டுக் கொள்ளை முற்றிலுமாக ஒழிக்கப்படும்,
  • வேலைவாய்ப்பு அலுவலகம் உண்மையாக இயங்கும். சீனியாரிட்டி அடிப்படையில்  காலியாகும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும்,
  • வவுச்சர் ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், இருக்க மாட்டார்கள். பணி நிரந்தரம் செய்ய படுவார்கள்,
  • எதிலும், எங்கும் ஊழல் என்பதே இருக்காது,
  • அனைத்து சாலைகளும், தரமான வகையில் ஐஐடி ஆலோசனை பெற்று போடப்படும்,
  • பஞ்சாலைகள் நன்கு திட்டம் இட்டு புனரமைத்து, பழைய பாரம்பரியத்துடன் இயக்கப்படும்,
  • தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், புணரமைக்கப்படும்,
  • ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில். புதிய தொழில், மற்றும் வேலைவாய்ப்பு கூடிய கொள்கை வகுக்கப்படும்,
  • மிக முக்கியமாக, நீர் வளம், நிலவளம், மண் வளம், பாதுகாக்கப்படும்.
  • கடலோர பாதுகாப்பு, பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.,
  • வரி வருவாய், இரட்டிப்பாக்கப்படும், அதற்கான திட்டங்கள் தீட்டப்படும்,
  • பிரெஞ்சு இந்திய உடன் படிக்கை உரிமை 100 சதவீத நிர்வாக மான்யம் பெற நடவடிக்கை எடுக்க படும்,
  • தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் சென்று நீதி பெறப்படும்,
  • இடைக்கால நிவாரணமும், இழப்பீடட்டு  தொகையும் கோரப்படும்,

புதுச்சேரியை சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற துணிச்சலான, பேராண்மை மிக்க, பேராற்றல் கொண்ட, போர்க்குணம் மிக்க, அரசாக புதுச்சேரி அரசை மாற்றுவோம்.

  • இதில் ஊழல் என்பதே இருக்காது,
  • பூமி பூஜை மாயாஜாலம், முற்றிலும் ஒழிக்கப்படும்,
  • கோயில் குளம் கும்பாபிஷேகம் நடத்துவது  போன்றவைகளில், அரசோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, ஈடுபட மாட்டார்கள்,
  • மக்கள் பணியே மகத்தான பணி,
  • ஓட்டுக்கு பணம் தரவும் மாட்டோம்,
  • ஓட்டுக்கு பணம் தர விடவும் மாட்டோம்,
  • ஊழல் ஊற்றுக்கண் அங்கேதான் ஆரம்பிக்கிறது,
  • அந்த ஆணிவேரை அங்கேயே பிடுங்கி மக்கள் விரும்பும் ஜனநாயகம் அமைப்போம்,

டில்லியில், அப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடந்ததுகொண்டு இருக்கிறது. மக்கள் ஆதரவுடன் பாஜகவையும் காங்கிரஸையும் மக்கள் ஓட ஓட விரட்டினர். இந்த இரு கட்சிகளின் மீது மக்களுக்கு எந்தளவுக்கு வெறுப்பு இருந்தால், மொத்தம் 70 இடத்தில் 67 இடத்தை பெற்று இருக்க முடியும்.

இது தான் மக்களின் மகத்தான சக்தி என்பதும். மகத்தான தீர்ப்பு என்பதும். இந்த தீர்ப்பு தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பஞ்சாப், சண்டிகர், கோவா,  உத்தரகாண்ட், என நமது புதுச்சேரி மாநிலத்துக்கும் வருகிறது.

வரும் பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல், இதில் ஆம் ஆத்மி கட்சி. களம் கான வருகிறது.

  • பஞ்சாயத்து 73-74 வது சட்டத்திருத்தம் 29 அதிகாரங்களை பெற,
  • குண்டும் குழியுமான சாலைகள்.,
  • சுகாதாரமற்ற மருத்துவ மனைகள்,
  • கிராம அரசு பள்ளிகள்,
  • கிராமப்புற பொருளாதாரம்,
  • நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றம் கான,
  • ஊழலற்ற நிர்வாகம் அமைய,
  • இந்த பழைய ஊழல் குப்பைகளை அகற்றி எறிய,
  • கையில் துடைப்பம் சின்னத்துடன்,
  • புதிய இளைஞர்கள்,
  • சிறந்த கல்வியாளர்கள்,
  • இளம் பெண்கள்,
  • வழக்கறிஞர்கள்,
  • ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்,
  • தேர்தல் களத்தில் இறங்குகின்றனர்.

புதிய புதுச்சேரியை உருவாக்க, ஒன்று கூடுவோம். சாதி மதத்தை வைத்து நம்மை பிரிக்கும் கும்பலை ஓட ஓட விரட்டுவோம். வீட்டையும், மாநிலத்தையும், சுத்தப்படுத்த கையில் எடுப்போம் துடைப்பத்தை. விரட்டியடிப்போம் இந்த ஊழல் கும்பலை.

தொகுப்பு:

கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.

பதிவு:

Hamid Incharges

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »